கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது32). உணவு பார்சல் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சொர்ணவள்ளி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அப்போது பூர்த்தி செய்யப்படாத காசோலையை சொர்ணவள்ளி பெற்றுக் கொண்டார். பின்னர் கோகுல் ரூ.70 ஆயிரம் வரை வட்டியுடன் சேர்த்து பணத்தை கட்டினார். ...

கோவை: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றார். அப்போது அறையில் சரவண்னுடன் பணியாற்றும் கலைச்செல்வன், தினேஷ், லிங்கேஸ்வர், ஜெயக்குமார் ஆகியோரும் இருந்தனர். தூங்கும் முன்பு அனைவரும் தங்களது செல்போனை சார்ஜ் ...

கோவையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு விரைந்து வந்தார். சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்குமாறும், விசாரணையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் துரித விசாரணை நடத்தி, ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) இரவு 8 மணி முதல் சனிக்கிழமை (டிசம்பா் ...

கோவை: பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன்,சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் ஈச்சனாரி விநாயகர் கோவில் ஒடைபகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கோவில் பின்புறம் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில். ரேசன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். சோதனை செய்ததில் பொது விநியோகத் ...

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கொச்சி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புனே – கன்னியாகுமரி ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொச்சியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புணே ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பா் 9-ம் தேதி புறப்படும் புனே  – ...

கோவை: டிராக்டர் அட்டாச்மென்ட்ஸ் தயாரிப்பதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக கோவையில் உள்ள புல் மெஷின்ஸ் நிறுவனம் உள்ளது. இதனிடையே விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தும் நோக்கத்துடன் இந்த நிறுவனத்தார் “புல் எலக்ட்ரிக்” என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக பல வகை விவசாயப் பணிகளை செயல்படுத்தும் வகையில் பேட்டரியில் இயங்கும் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களிலுள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிடபட்டது. இதையடுத்து தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, “நமது நிலம் நமதே” என்ற ...

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 12 லிருந்து 13 கி.மீ-ஆக அதிகரித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ...

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (டிச. 8) காலை முதல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி பாஜக 158 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தேர்தல் ...