சென்னை: சென்னை வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி கூறுவதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ...
சென்னை: மெரீனா கடற்கரையில் கருணாநிதி நினைவுச்சின்னம் அருகே கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது. பேனா நினைவுச்சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாகவும் பல்வேறு கட்ட அனுமதிகளை பெற வேண்டியுள்ளதாகவும் தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக ...
பழங்குடியினத்தவர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்டோரை சேர்க்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள நரிக்குறவ மக்கள் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நரிக்குறவ பெண் அஸ்வினி பேசுகையில் , வணக்கம் என் பேரு ...
புதிய தேசிய கல்விக் கொள்கையில் காலை சிற்றுண்டி திட்டம் இருக்கிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழிசை, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த ...
கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடக்கம் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது இந்த ...
சென்னையில் ஓம்ஆரில் குடிபோதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு இளம்பெண் மென்பொறியாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகரின் உறவினரும், பிரபல ஓட்டல் அதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அக்காததாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமியும் (23, ...
ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு 10 ஆண்டு சிறை ஈமு கோழி மோசடி வழக்கில் உரிமையாளர்கள் இருவருக்கு தல பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு பெருந்துறையில் ஆர்.கே ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கண்ணுசாமி, மோகனசுந்தரம் இவர்கள் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக ...
பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மத்திய அரசும் மாநில அரசும் இவ்வகை மீன்களுக்கு இந்தியாவில் தடை விதித்துவிட்டது. எனினும், தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அவ்வப்போது ஆப்ரிக்க வகை மீன்கள் வளர்த்து விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தகவலறிந்து மீன் பண்ணைகளை சீல் வைக்க அதிகாரிகள் சென்றாலும், தாங்கள் உள்ளூரில் விற்பனை செய்வதில்லை ...
யாகூப் மேமனின் ஏஜெண்டாக இருப்பதை விட மோடி மற்றும் அமித் ஷாவின் ஏஜெண்டுகளாக இருப்பது நல்லது என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே மும்பையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது: யாகூப் மேமன் ஒரு துரோகி. அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது கல்லறை மகிமைப்படுத்தப்பட்டது. ...
இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியுள்ள வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்துக்கள் யார்? என்பது குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டித்து பதிவிட்டிருந்தார். ...