டாஸ்மாக் பார் கேஷியர் மீது தாக்கி நாற்காலி உடைப்பு- குடிபோதையில் ரகளை செய்த துணிக்கடை ஊழியர், சூப்பர்வைசர்..!

கோவை : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 25) இவர் குனியமுத்தூர் அறிவொளி நகர் எம் ஜி ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் இருந்த போது குனியமுத்தூர் பி. கே. புதூரை சேர்ந்த அஜித்( வயது 24)கோவைப்புதூர் விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்த தினேஷ் குமார் ( வயது 26) ஆகியோர் மது குடிக்குச் சென்றனர். குடிபோதையில் கேஷியர் சதீஷிடம் தகராறு செய்தார்கள். பின்னர் அவரை மது பாட்டில் உடைத்து தாக்கினார்ளாம். அங்கிருந்து நாற்காலிகளையும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது .இது குறித்து சதீஷ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் விரைந்து சென்று அஜித், தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் அஜித் காந்திபுரத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.  தினேஷ்குமார் டி. எம் .இ. படித்து முடித்துவிட்டு அறிவொளி நகரில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் .இவர்கள் மீது கொலை மிரட்டல், தாக்குதல் சேதப்படுத்துதல்,உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.