கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மூன்று குட்டிகள் கொண்ட யானை கூட்டம்…

கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மூன்று குட்டிகள் கொண்ட யானை கூட்டம்…

கோவை மருதமலை அருகே ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 3 குட்டிகள் உள்பட 5 யானை கூட்டம் மாலை 7 மணி அளவில் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த வனத் துறையினர், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் அந்த காட்டு யானை கூட்டத்தை விரட்ட பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு சுமார் 11. 50 மணிக்கு மருதமலை வனபகுதிக்கு விரட்ட அனுப்பினர்.

 

இந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.