பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சிகிச்சைக்காக மக்கள் கூட்டம் மருத்துவமனைகள் முன்பு அலைமோதுகிறது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதால் அனைத்து கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் ...
இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் பிடித்துள்ளது. இந்தியா டுடே இதழ் ஆண்டு வரும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை ...
மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் வருகின்றனர். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ...
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவு நவம்பரில் 14 மடங்காக அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை கண்டித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததோடு, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி ...
சென்னை: “வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துதான் இன்று நாட்டுக்குத் தேவையான கொள்கை. இந்தக் கொள்கையை அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாக நீங்கள் சுருக்கி நினைத்துவிடக் கூடாது. கலை அமைப்புகளின் கொள்கையாக, ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை விழா ...
கோவை: அன்னூரில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க அரசு நிலங்களை கைகப்படுத்தும் என்று அறிவித்தது. இதற்கு அன்னூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் விவசாயிகளின் நிலம் அவர்களது அனுமதி இல்லாமல் எடுக்கப்படாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். இதனிடையே நமது நிலம் நமது போராட்டக்குழு தலைவர் குமார் ரவிக்குமார் மற்றும் ...
ஊட்டி: உடல்நிலை சரியில்லாததால் இலாகாவை மாற்றித் தருமாறு முதல்-அமைச்சரிடம் கேட்டதால் தனக்கு சுற்றுலாத்துறையை ஒதுக்கியதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகையில் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது. குறிப்பாக நாட்டிலேயே அதிக ...
கோவை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத் துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் பெற முடியாமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வங்கி கணக்குடன் ஆதார் ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் ( வயது 49 )இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் நேற்று அன்னூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட 25 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...












