இட்டாநகர்: சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அருணாச்சலப் பிரதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அங்கு கருடா சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் களமிறங்கியுள்ளனர். கருடா சிறப்புப் படையினரின் வருகை குறித்து தெரியவந்ததால், சீன ராணுவ வீரர்கள் சற்று அச்சம் கலந்த மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மிக மிக துல்லியமான, அதே நேரத்தில் மிகவும் ...

டெல்லி: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக மக்‍களை ஒன்றுதிரட்டும் வகையில் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தின் குமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, ...

சபரிமலையில் 27-ந் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த ஆண்டு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ...

சென்னை: “அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற தீர்மானத்தை ரத்து செய்ய ஒருவருக்கு மனமிருந்தால், அவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எந்த நிலையிலும் எந்தக் காலக்கட்டத்திலும் அந்த மாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும், ‘கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் செல்வாக்கை அதிமுக இழக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது’ என்று ...

கொரோனா வைரஸின் உருமாறிய BF.7 வகை தொற்று சீனாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. கொரோனா உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. தற்போது, BF.7 வகை ...

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மரபணு சோதனை ஆய்வகம் மூலம் கொரோனா மரபணு மாற்றம் குறித்து கண்காணித்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் பயனாளிக்கு தமிழக முதல்வர் மருந்து பெட்டகம் வழங்க உள்ளதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வு ...

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்குப் பின் எந்த ஒரு சூழலையும் சமாளித்திட தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில் சடலங்களை எரிக்க மயானங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா மற்ற ...

கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா அரோரா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 15 வயதான இவர்களது மகன், பிரியா அரோராவின் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதை பிரியா ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகளும் தி.மு.க வசம் உள்ளன. பத்மநாபபுரம் நகராட்சி சேர்மனாக அருள்சோபன் இருக்கிறார். துணைத் தலைவராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த மணி சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ...

டெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர். அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதனை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சீனாவின் இந்த ஊடுருவல் முயற்சி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ...