கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி ...
கோவை சின்னினயம்பாளையம் சின்ன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது உறவினர் முத்துசாமி. இவர் சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று முத்துசாமி, சந்திரசேகருக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறினார். சந்திரசேகர் உடனே அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது முத்துசாமி அவரிடம் தனது பெட்ரோல் பங்கில் ...
கோவை: கொரோனா தொற்று பரவலுக்குமுன்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டன. தொற்று பரவலால் விமானங்கள் இயக்கத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- ெகாரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2020, 2021-ம் ...
கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது படகு சவாரி திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வாலாங்குளத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் சில்மிஷ லீலைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இவர்களின் அத்துமீறல்களை அந்த பகுதியில் செல்வோர் கண்டித்தாலும் அவர்கள் ...
கோவை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- எந்த தனியார் பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. தவறினால் அபராதம் விதித்து மூடப்படும். அங்கீகாரம் பெற்றும் புதுப்பித்தல் பெறாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டுப் பள்ளிகளுக்காக அங்கீகாரம் பெற்று, பிரைமரி வகுப்புகள் நடத்தினால் முன்னறிவிப்பின்றி பள்ளி மூடப்படும். ...
கோவை: தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும், அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திர வடிவு உள்ளிட்ட வேட்பாளர்கள் ...
சூலூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கணியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது நண்பரான பாய்சர் அலியுடன் கணியூர் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகே ஒரு கார் வேகமாக வந்தது. இவர்களின் அருகில் வந்ததும் கார் நின்றது. அதில் இருந்து ...
கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 31) இவர் தமிழக வியாபாரிகள் சம்மேளன உறுப்பினராக உள்ளார் . இவரது மனைவி மீனாட்சி (வயது(29) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து. குழந்தைக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக ...
கோவை இருகூர் ஏ.ஜி.புதூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 33). இவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி கம்பியூட்டர் நெட்வொர்ங் படித்து முடித்துள்ளார். தற்போது கோவையில் வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சந்திரமோகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முயற்சி செய்துவந்தார். அப்போது பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. இதை ...
கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகில் பிரபல சொகுசு மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் இருந்து இன்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஷோரூமில் தீப்பிடித்து எரிந்து ...













