தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை: திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது – கோவையில் நடிகை அமிர்த அய்யர் பேட்டி

தமிழ் சினிமாவில் வேறுபாடுகள் பார்ப்பதில்லை: திறமையான அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதுகோவையில் நடிகை அமிர்த அய்யர் பேட்டி

கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் கார்த்திக் தங்க நகை மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கோவைக்கு நான் சிறுவயதில் இருந்து வந்து கொண்டு இருக்கிறேன். கல்லூரி படிக்கும் போது பலமுறை கோவை வந்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் வரும் போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை வரும் போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன். நேற்று வந்த போது ஒரு இனிப்பு வகை சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது என தெரிவித்தார். இவ்விழாவில் நகை கடை உரிமையாளர் சுமலதா சாய்பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.