நாடு முழுவதும் விற்பனையாகும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய நடத்தப்பட்ட சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 1,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 239 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு ...
பல பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின் பேரில், பரமக்குடி துணைப் போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி டி.எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்த ஜாபர் சித்திக், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக அவரது மனைவி உயர் அதிகாரிகளிடம் ...
தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.ந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த விசாரணை ...
சட்டப்பேரவை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் எங்களுக்கு பதில் அளிக்கும்போது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நீங்கள் அவற்றையெல்லாம் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள். ...
ராமேஸ்வரம்: கள்ளக்கடல் எச்சரிக்கையை தொடர்ந்து, தனுஷ்கோடி செல்ல 2வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.பாக்ஜலசந்தி கடலில் பலத்த சூறைக்காற்றுடன் திடீரென கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன் எச்சரித்தது. மேலும் கடலில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் ...
வீடு புகுந்து தாக்கியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசமாகச் செல்ல விருப்பம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அவரது சகோதரரின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022 ஆக.8-ம் தேதி சொத்துப் பிரச்சினை காரணமாக புதுச்சேரியில் உள்ள தனது அண்ணன் மரிய குலோத், அண்ணி ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்திற்கு நேற்று தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே கைலாசநாதன், ...
மாநில நுகர்வோர் சேவைக்காக தானியங்கி உரையாடல் வசதியுடன் கூடிய வாட்ஸ் ஆப் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த பின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களில் மொத்தம் 31 ஆயிரம் மெட்ரிக்டன் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளால், அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் அவரது மக்கள் ஆதரவு வெறும் 33 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 1974-ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி, இந்தியா, சீனா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி வரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது அதற்கு ஆதரவளிக்க ...












