கோவை அருகே உள்ள வடவள்ளி ஆர். கே. எஸ். நகரை சேர்ந்தவர் நாராயணன், அவரது மனைவி சாந்தகுமாரி( வயது 62 இவர் நேற்று அரசு டவுன் பஸ்சில் உக்கடம் பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர். இது குறித்து ...
கோவை காட்டூர் காளப்பன் லேஅவுட்டை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் அனுப்பிரியா ( வயது 25 ) இவர் காட்டூர் செல்லப்பன் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மெட்டல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் திலகவதி, ஜோதி நகரை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் அனுபிரியாவை தகாத வார்த்தைகளால் ...
கோவை அருகே உள்ள காளப்பட்டி வீரியம்பாளையம் ரோடு, கிருஷ்ணா பார்க்கில் வசிப்பவர் சண்முகசுந்தரம் ( வயது64) மின்வாரியத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவரது வீட்டில் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி விட்டனர்.கடந்த மாதம் 21 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு அவரது உறவினர் இல்ல ...
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் நாட்டிற்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமான ஓடுபாதை சீரமைப்பு பணி தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை பணிகள் ...
ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அவரது சார்பாக அவரது கருத்தினை தெரிவிக்க சொன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து நேற்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து ...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இன்று காலை முதலே முன்னிலை வகித்துவந்த, தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் ...
சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டபேரவைக்குள் நுழைகிறார் ஈவிகேஎஸ். இளங்கோவன். அவர் கடந்து வந்த அரசியல் பாதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தை விட்டு விலகி திமுகவை தொடங்கியபோது ஈவிகே சம்பத் அவருடன் இணைந்து பயணித்தார். பின்னர் ஈவிகே.சம்பத் காங்கிரசில் சேர்ந்தார். தந்தையுடன், இளங்கோவனும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில் இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ...
நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் இம்முறை ஹெகானி ஜக்லு, சல்ஹாட்டோ க்ரூஸ், ஹூகளி சீமா, ரோசி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் என்டிபிபி சார்பில் திமாபூர்-3 தொகுதியில் போட்டியிட்ட ஹெகானி ஜக்லு, அங்காமி தொகுதியில் போட்டியிட்ட சல்ஹாட்டோ க்ரூஸ் வெற்றி பெற்றனர். இதன் மூலம் நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ...
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளன. இதுதவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை ...












