நாகலாந்து வரலாற்றில் முதல் முறையாக 2 பெண் எம்எல்ஏ.க்கள்..!

நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் இம்முறை ஹெகானி ஜக்லு, சல்ஹாட்டோ க்ரூஸ், ஹூகளி சீமா, ரோசி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் என்டிபிபி சார்பில் திமாபூர்-3 தொகுதியில் போட்டியிட்ட ஹெகானி ஜக்லு, அங்காமி தொகுதியில் போட்டியிட்ட சல்ஹாட்டோ க்ரூஸ் வெற்றி பெற்றனர். இதன் மூலம் நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண்கள் எம்எல்ஏ.க்களாக தேர்வாகி சட்டசபை செல்கின்றனர்.