திருச்சியில் நடைபெறும் மும்பெரும் விழாவிற்கான மாநாட்டு மேடையானது சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில்,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – அதிமுக 51 வது ஆண்டு விழா என முப்பெரும் விழா மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக பொன்மலை ...

இந்தியாவைக் காப்பாற்றுவதற்குத் தயாராக இருப்பீர்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று உரையாற்றியுள்ளார்… இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக விவசாய அணியின் துணைச் செயலாளர் ந.நல்லசேதுபதி இல்லத் திருமண விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மேடையில் உரையாற்றும் போது, 1967-க்கு ...

சென்னை: ‘மது ஆலைகளை மூடுவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசு, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் உள்ளது’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி ...

சச்சின் டெண்டுல்கர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். அவருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் பல சாதனைகளை செய்ய வைத்துள்ளது. ஆரம்பத்தில் அவர் ஒரு பவுலராக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது தான், அவருக்கு பந்து வீச்சு சரியில்லை என்று கூறி ரமாகாந்த் அச்ரேகர் அவரை பேட்டிங் பயிற்சி எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான் ...

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ...

கோவை என்.எச்.ரோடு ஐந்து முக்கு மாகாளியம்மன் கோவில், ரயில் நிலையம் முன் உள்ள விநாயகர் கோவில்,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் உள்ள விநாயகர் கோவில் ஆகியவற்றில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி டயர்களை போட்டு ஒருவர் தீ வைத்து எரித்தார் .இது தொடர்பாக பெரியகடை வீதி ,உக்கடம் ரேஸ்கோர்ஸ் ...

கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42) இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 8-ந்தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரி சென்று ஓட்டலில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று அவர் ஓட்டல் அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது ...

கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஜெமினி நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அப்துல் வகாப் .இவரது மகன் ஷாஜகான் (வயது 40) செருப்பு கடை,செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உக்கடம் கரும்புக் கடையிலும் சொந்த வீடு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் என்பதால் ஷாஜகான் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சக்தி கணேஷ் (வயது 21) நேற்று இவரும் நல்லூர் சர்ச் காலனியை  சேர்ந்த சதீஷ்குமார் ( வயது 18)என்பவரும் காந்தி நகரை சேர்ந்த அர்ஜூனா ( வயது 27) என்பவருடன் பைக்கில் ஆத்து பொள்ளாச்சி- ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ...

திக்கணஞ்ஜாடு, வள்ளோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், அவரது மகன் சபீஷ் (வயது 20) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .வழியாம் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார் .இவர் செல்போனில் திருநங்கைகளுக்கு உரிய பிரத்யேக செயலி வைத்திருந்தார்.அதில் தொடர்பு கொண்ட 3 ...