அனுமதி பெறாமல் வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் – பாஜக வினர் மீது வழக்கு.!!

கோவை ராமநாதபுரம் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே பாஜகவினர் அனுமதி பெறாமல் வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி தேர்தல் பிரச்சாரம் செய்வதாக தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதிகாரி ராமலட்சுமி அங்கு விசாரணை நடத்தினார். அப்போது அனுமதி பெறாமல் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது..இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவினர் வேலூர் சையத் இப்ராஹிம், துரைராஜ், கனகராஜ் கணேஷ், அருள் உட்பட சிலர் மீது 3 பிரிவின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல ரேஸ்கோர்ஸ் பகுதியில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததாக வேலூர் செய்யது இப்ராகிம் உட்பட பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.