வடமாநில சமையல் தொழிலாளியை தாக்கி பணம் வழிப்பறி- மர்ம கும்பலுக்கு வலை..

கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்கிகுல் அல் இஸ்லாம் (வயது 20) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சைனீஸ் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள லங்கா கார்னர் மேம்பாலத்துக்கு அடியில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து தாக்கியது. பின்னர் அவரிடம் இருந்த ரூ 7 ஆயிரத்தை கொள்ளளயடித்து கொண்டு தப்பி சென்று விட்டது. இதில் சமையல் தொழிலாளி காயமடைந்தார் . அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து உக்கடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார்கள்.