கோவை பஸ்சில் வியாபாரியிடம்  திருட்டு..!

கோவை பஸ்சில் வியாபாரியிடம்  திருட்டு..! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பக்கம் உள்ள கரட்டை பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி , இவரது மகன் ஹரி பிரசாத் ( வயது 30)வியாபாரி..இவர் நேற்று இவரது தந்தையை மருத்துவ சிகிச்சைக்காக பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தார். பீளமேட்டில் உள்ள மருத்துவமனை முன் பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது சட்டைப் பையில் இருந்த ரூ 50 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் இது குறித்து ஹரிபிரசாத் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..