மருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபதன்று மலை பாதையில் வாகனங்களுக்கு தடை..!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளான, டிசம்பர் 6-ந் தேதி, அடி வாரத்தில் இருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-
வழக்கமாக, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அப்போது, மலைக்கு மேல் ஏராளமான வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கார்த்திகை தீப திருநாளான, வரும் டிசம்பர் 6-ந் தேதி, காலை 6 மணி முதல் மாலை, 7 மணி வரை, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் செல்ல இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அடிவாரத்தில் இருந்து தேவஸ்தான பஸ்கள் வாயிலாக, பக்தர்கள் மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.