சட்டப்பேரவையில் சபாநாயகருடன் வாக்குவாதம் – அதிமுக வெளிநடப்பு..!

திமுகவினரின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்ததால் சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

சட்டப்பேரவையில் அதிமுகவினர் கொடுத்த தீர்மானங்களை முன்மொழிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அரசினர் தீர்மானம் உள்ளது; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித்தலைவரை போலவே எதிர்க்கட்சித் துணைத்தலைவரையும் ஏற்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை, ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பிரச்னையை முன்வைத்து சபாநாயகருடன் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அதிமுகவினரின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளது.