அரிவாளை கழுத்தில் வைத்து மீன் வியாபாரியிடம் பணம் கொள்ளை – இருவருக்கு வலைவீச்சு..!

கோவை அம்மன் குளம், அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ஞானராஜ் ( வயது 40) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து 2 பேர் இவரை வழிமறித்து அரிவாளை கழுத்தில் வைத்து பணமிருந்தால் கொடுத்து விடு இல்லையேல் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த 6,300 ரூபாய் மற்றும் வெள்ளி செயினையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர் . இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரேம் தாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற 2 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.