தனியாக இருக்கும் மூதாட்டியை கத்தியால் குத்தி நகை, பணம் கொள்ளை..!

கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் அருகே உள்ள கணேசபுரம் சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி சுப்பம்மாள்(67) இவர் தனியாக வசித்து கொண்டு இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகன் தட்சிணாமூர்த்தி அவரது குடும்பத்துடன் தேனி மாவட்டத்தில் வசித்து வருகிறார் . மகள் தேவி என்பவர் அவரது குடும்பத்துடன் ஆலாங்கொம்பு என்ற இடத்தில் வசித்து வருகிறார் . சுப்பம்மாள் நேற்று இரவு 8-30 மணிக்கு வீட்டு வாசலிலிருந்து வீட்டுக்குள் சென்றபோது யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் தலையில் பின் பகுதியில் கத்தியால் குத்தினார்.பின்னர் அவரது கழுத்தில் இருந்த 5 1/4 பவுன்
தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டும், பீரோவிலிருந்து பணம் ரூபாய் 5, ஆயிரத்தை திருடி சென்று விட்டார். பின்னர் அருகில் உள்ள வீட்டார் தகவல் தெரிந்து மேற்படி சுப்பம்மாளை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . அங்கு சுப்பம்மாளின் பின் தலையில் ஆன சிறிய ரத்த காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை பெற்று கோவில்பாளையம் குமரன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு   அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது சம்பந்தமாக சிறுமுகை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்..