அகில இந்திய காவல் பணித்திறன் போட்டி – தமிழக காவல்துறையினர் அபார சாதனை.!!

சென்னை:67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை உத்திரபிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் நடந்தது. இந்த காவல் பணித்திறன் போட்டிகள் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டி கணினி திறன் போட்டி நாச வேலை தடுப்பு அதாவது வெடிகுண்டு த டுப்பு திறன் போட்டி மோப்பநாய் திறன் போட்டி வீடியோ படம் எடுத்தல் மற்றும் காவல் தொழில் ரீதியாக படம் எடுக்கும் திறன் போட்டி ஆகிய 6 பிரிவுகளில் நடைபெற்றது. போட்டியிலே தமிழ்நாடு உட்பட 21 மாநில காவல் துறை அணிகளும் 7 மத்திய சிறப்பு படைப்பிரிவு அணிகளும் கலந்து கொண்டன தமிழ்நாடு காவல்துறை குழுவிற்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமி யின் இயக்குனர் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது எம் அண்ணாதுரை கூடுதல் துணை ஆணையர் சென்னை மாநகர காவல் துறை மற்றும் எம் பாபு துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியரகம் தலைமையில் சென்ற தமிழக காவல்துறை குழு போட்டியில் பங்கேற்று 2 தங்க பதக்கங்கள் 1 வெள்ளி பதக்கம் மற்றும்2 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று பதக்க பட்டியில் 3 வது இடத்தை பிடித்தது . மேலும் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டியில் பங்கேற்று முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக்கான வெற்றி கோப்பைகளையும் தமிழ்நாடு காவல்துறை குழு வென்றது. வெற்றி பெற்ற குழுவினர் பதக்கங்களையும் மற்றும் கோப்பைகளையும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவாலை சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றனர் உதவி ஆய்வாளராக பணியாற்றும் கே வேல்முருகன் தடய பொருளை கையாளுதல் மற்றும் சிப்பம் கட்டுதல் பிரிவில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் . காவல் ஆய்வாளராக பணியாற்றும் கே வனிதா கைரேகை பதிவியில் பிரிவில் சாதனை படைத்த வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். குற்றவியல் சட்டங்கள் எழுத்து தேர்வில் அதே வனிதா வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். உதவி ஆய்வாளராக பணியாற்றும் எச் சரவணன் தடய அறிவியல் பிரிவில் சாதனை படைத்து வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். தலைமை காவலராக பணியாற்றும் ஆர் ரவிச்சந்திரன் மற்றும் டோடோ என்கிற ரெக்ஸ் நாய் போதைப் பொருள் கண்டுபிடித்தல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அபார சாதனை பெற்றுள்ளனர்..