கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது – எஸ்.பி. பத்ரி நாராயணன் அதிரடி..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சூரிய பிரகாஷ் (வயது, 26.) இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது, 23) என்பவரை கொலை செய்தார்.இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் சூரிய பிரகாசை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், கலெக்டர் கிராந்தி குமாரிடம் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின்படி, சூரிய பிரகாஷ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் படி, சூரிய பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தில், சிறையில் அடைத்தனர்.இந்த வருடத்தில் இதுவரை, கோவை மாவட்டத்தில், 29 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்தார்.