அம்பத்தூரில் போலீஸ் நடமாட்டத்தை கேட்ட மர்ம ஆசாமி – 7 கிலோ கஞ்சாவுடன் அலேக்காக தூக்கிய காவல்துறை..!

சென்னையை அடுத்து அம்பத்தூர் பகுதியில் கஞ்சா நடமாட்டத்தை அடியோடு ஒழித்திட வெறித்தனமாக அலைந்து கொண்டிருப்பவர் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கைலியும் டீ சர்ட் அணிந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட்க்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம ஆசாமி ஆட்டோ டிரைவரிடம் ஏம்பா இங்கு போலீஸ் நடமாட்டம் எப்படி இருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்த போதே போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனை மடக்கி பிடித்து அவன் வைத்திருந்த பையை சோதனை இட்டார். அதில் 7 கிலோ அதிக போதை ஏற்றும் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தார் .அவனை கெத்தாக பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அவனது பெயர் ஸஜீர் (வயது 24 ) தகப்பனார் பெயர் சனாவாஸ் அலகு தாரா காலனி சேர்தலா ஆலப்புழா கேரளா விசாரணையில் தெரியவந்தது .இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்..