மொபட்டில் சென்ற இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வடமாநில வாலிபர் கைது..!

பொள்ளாச்சி பாலமநல்லூரை சேர்ந்தவர் சேட் முகமது. இவரது மகள் மதினாபேகம்
(வயது 26). இவர் வீட்டில் சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மதினாபேகத்தின் சகோதரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
அதனால் அவர் தனது சகோதரியை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு சகோதரியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மதினாபேகம் தனது மொபட்டில் வீடு திரும்பினார். மக்கினாம்பட்டி-பாலமநல்லூர் ரோட்டில் வந்த போது வாலிபர் ஒருவர் குடிபோதையில் மதினாபேகத்தின் மொபட்டை தடுத்து நிறுத்தினார்.
கொலை மிட்டல் அப்போது அந்த வாலிபர் திடீரென மதினாபேகத்திடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன மதினாபேகம் அந்த வாலிபரிடம் இருந்து தப்பி சென்று பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி
வந்தனர். அப்போது பீகாரை சேர்ந்த ரவீந்திர மாஜி (25) என்பவர்
மதினாபேகத்திடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரவீந்திர மாஜியை கைது செய்தனர். பின்னர் அவரை
கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.