காதலித்து கர்ப்பமாக்கி பின் திருமணம் செய்து கொண்டு முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பேரூர்
அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர்
கூறியிருப்பதாவது:-

நானும், கார்த்திக் (27) என்பவரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து
வந்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை
பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் அடைந்தேன்.
அப்போது நான் கர்ப்பம் அடைந்ததை கூறி கார்த்திக்கிடம் திருமணம் செய்து
கொள்ளலாம் என்றேன். அதற்கு அவர் மறுத்து விட்டார். பல முறை கேட்டும் அவர்
என்னை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இதனால் நான் காந்திபுரம்
அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். அங்கு போலீசார் எங்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். கோவில்பாைளயத்தில் குடியேறி வாழ்ந்து வந்தோம்.

எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கார்த்திக்
சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பின்னர் அவர் என்னை
தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு
இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நான் அவரை தேடி கண்டு பிடித்து விசாரித்தேன். அப்போது அவர் தனது தாயார் மற்றும் சகோதரியின் உதவியுடன் வேறொறு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அந்த பெண் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி
மிரட்டல் விடுத்தனர். எனவே என்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கொண்ட
எனது கணவர் கார்த்திக், அவரது தாயார் சுமதி, சகோதரி காஞ்சனா, மற்றும்
2-வது மனைவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து பேரூர்
அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.