மனைவியை ஏமாற்றி கள்ளக்காதலியை திருமணம் செய்து குழந்தை பெற்ற கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!

கோவை அருகில் உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார் .எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது .நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் கணவர் அவரது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மூலமாக எனக்கு தெரியவந்தது. இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது . இதனை அடுத்து நான் என் கணவர் விட்டு பிரிந்து மகனுடன் என் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன் . இந்த நிலையில் எனது கணவர் எனக்கு தெரியாமல் அவரது கள்ளக்காதலியே இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது .இதையடுத்து நான் இது குறித்து எனது கணவரிடம் கேட்டேன். அப்போது அவர்.தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். என்னை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் இளம் பெண்ணின் கணவர் அவரது இரண்டாவது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.