வால்பாறை அருகே உள்ள செங்குத்து பாறை எஸ்டேட்டில் டேங்கருடன் டிராக்டர் 150 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்து- 2 பேர் காயம்..

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்கா என்.சி. யை சேர்ந்த செங்குத்துப்பாறை எஸ்டேட் பகுதியில் நேற்று காலை தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிபதற்காக எஸ்டேட் மருந்து கிடங்கில் இருந்து வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் மருந்தை எடுத்து 38 ம் நம்பர் தேயிலைத் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சமார் 150 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச்சென்ற வட மாநில தொழிலாளி சஞ்சய் வயது 28 மற்றும் உடனிருந்த முருகன் வயது 48 ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் காட்டிற்குள் விழுந்து கிடந்த நிலையில் டிராக்டர் சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது சத்தம் கேட்டு அவ்வழியாகச்சென்ற தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்துள்ளனர். இதில் முருகன் என்பவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டிருந்த நிலையில் டிராக்டரை இயக்கிய சஞ்சய் பலத்த காயம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது .

 

எனவே சஞ்சய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..