மளிகை கடையில் பணம், அரிசி திருடிய வாலிபர் கைது-3 பேருக்கு வலை..!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் அய்யலுசாமி (வயது 48)மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார் .காலையில் கடையை திறக்க வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பணம் ரூ 2,300, மற்றும் 10 கிலோ அரிசி, மளிகை சாமான்களை திருடிக் கொண்டு வெளியே வந்தனர். அய்யலு சாமியை கண்டதும் அந்த கும்பல் ஓட்டம் பிடித்தது.பொதுமக்கள் உதவியுடன் அவர்களில் ஒருவனை மடக்கிப் பிடித்தனர் . அந்த ஆசாமி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஊட்டி காந்தலை சேர்ந்த வினித் குமார் ( வயது 20) என்பது தெரியவந்தது.தப்பி ஓடிய சபரி, இமான், ஹரிஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.