குறிச்சி குளத்தில் குளிக்க சென்ற பள்ளிக்கூட மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி..

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள லோகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கமால். இவரது மகன் சன்பர் ( வயது 11) போத்தனூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு படித்து வந்தான் . நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை 10 மணிக்கு தனது நண்பர்கள் 2 பேருடன் குறிச்சி குளத்திற்கு குளிக்ககச் சென்றான். 3 பேரும் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது சன்பர் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். அருகில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர் .  அதற்குள் சிறுவன் சன்பர் தண்ணீர் மூழ்கி இறந்துவிட்டான் . அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தின் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..