இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்ஸோவில் கைது..

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் டோனி பிரபு ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகிவிட்டது .குழந்தைகள் இல்லை. தற்போது இவர்கள்  தாயுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு உதவி செய்ய ஒருவரை அனுப்பி வையுங்கள் என்று கேட்டுள்ளார் . அவருடைய உறவினர் தனது 25 வயது மகளை டோனி பிரபுவுடன் அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்கு சென்றதும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அந்த இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் டோனி பிரபு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.