லாபத்தில் பங்கு தருவதாக தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 4 லட்சம் நூதன மோசடி – 2 பேருக்கு வழக்குப்பதிவு..

கோவை. ஆலந்துறை அருகே உள்ள மத்வராயபுரம் ஆனந்தகுமார் ( வயது 26) தனியார் நிறுவன ஊழியர் இவர் கடந்த ஆண்டு கோவை ரேஸ் கோர்சில் செயல்பட்டு வந்த தனியார் ஆன்லைன் வணிக நிறுவத்தினர் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் இந்த நிறுவனத்தில் இரண்டு லட்சம் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் அதன் படி தினசரி ரூ 1000முதல் ரூ 1150 வரை சம்பாதிக்கலாம். என்று கூறியிருந்தனர் இதனை பார்த்து ஆனந்தகுமார் அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு கடந்த ஆண்டு ரூ 4 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் நிறுவனத்தின் சொன்னபடி எந்த லாபத்தொகையும் ஆனந்த குமாருக்கு கொடுக்கவில்லை இதையடுத்து ஆனந்தகுமார் நிறுவனத்தின் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது .இது குறித்து விசாரித்த போது மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஆனந்தகுமார் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் போலீசார் விசாரணை நடத்தி தனியார் நிறுவன உரிமையாளர்கள் ரவிக்குமார் ராமு ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.