பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த கேவலமான தந்தை போக்ஸோவில் கைது..!

கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோடு பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ஒருவர்,லாரி ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் .இவரது 2-வது மகளான 16 வயது சிறுமி தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மாவின் சொந்த ஊருக்கு சென்று விட்டார். வீட்டில் தந்தையுடன் மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது அவர் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அந்த  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மறுநாள் காலையில் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி விட்டு வேலை சென்று விட்டார். இதையடுத்து சிறுமிக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தையை கைது செய்தனர் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.