திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை எங்கோ மாயம்..!

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் ராஜாராம் ( வயது 29) எம்.பி.ஏ .பட்டதாரி. இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசிகா ( வயது 28) முதுநிலை பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது கடந்த 14 ஆம் தேதி வேலைக்கு சென்ற ராஜாராம் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை அலுவலகத்தில் வைத்துள்ளார். அலுவலக குறிப்பில் எனக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்று எழுதி வைத்துவிட்டு எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மனைவி கவுசிகா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..