கோவையில் தடை உத்தரவை மீறி டாஸ்மாக் பாரில் மது விற்ற 65 பேர் கைது..!

கோவை : சுதந்திர தின விழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கீரரந்தி குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதை யடுத்து மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி கோவை மாநகரிலும், மாவட்டத்திலும் டாஸ்மாக் பார்களிலும், பெட்டி கடைகளிலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கோவை மாவட்டம் முழுவதும் 65 பேர் கைது செய்யப்பட்டனர்  480 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.