நாய் சாலையில் குறுக்கே பாய்ந்ததால் பைக்கில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி..!

கோவை சுந்தராபுரத்தில் உள்ள லோகநாதபுரம், முதலியார் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 52 )மோட்டார் தொழில் செய்து வந்தார். இவர் அன்னூர் அருகே உள்ள குரும்ப பாளையம்- வாகராயம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மோலப்பாளையம் செந்தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று ஒரு நாய் ரோட்டில் குறுக்கே பாய்ந்து பைக் மீது மோதியது.இதனால் செல்வராஜ்நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனை சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனிக்காமல் நேற்று இரவு இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி சிவகாமி அன்னூர் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.