3 -வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி – இன்ஜினியர்,வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிவு..

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 52) சென்ட்ரிங் தொழிலாளி .நேற்று இவரும் சவுரிபாளையம் பிரிவு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபிராஜ் ( வயது 38 |என்பவரும் ஒண்டிப்புதூர் கிருஷ்ணா நகரில் செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான வீட்டில் சென்ட்ரிங் பலகை பிரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர். 3-வது மாடியில் சென்ட்ரிங் பலகையை பிரிக்கும் போது திடீரென்று 2 பேரும் கீழே விழுந்தனர்..இதில்இருவருக்கும்பலத்த காயம் ஏற்பட்டது .இவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் வழியில் சாமிநாதன் இறந்துவிட்டார். கோபி ராஜ் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அந்த வீட்டின் இன்ஜினியர் காட்வின் வீட்டு உரிமையாளர் செல்லதுரை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.