1000 கிலோ செல்போன் கேபிள் பைப்புகள் திருட்டு – 4 பேர் கைது..!

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூலாங்கணறு ஜீவா நகரை சேர்ந்தவர் தயாள் ராஜசேகர் ( வயது 29) இவர் கோவை செல்வபுரம் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தொழில் நிமித்தமாக உக்கடம் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது அந்த நிறுவனத்தில் வைத்திருந்த 1000 கிலோ செல்போன் கேபிள் பைப்புகளை காணவில்லை.இதன் மதிப்பு ரூ. 90 ஆயிரம் இருக்கும். இது குறித்து தயாள் ராஜசேகர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நாகை மாவட்டத்தை ராதாகிருஷ்ணன் (வயது 22) சஞ்சய் ( வயது 21) ஐயப்பன் ( வயது 36) வேலூர் குமார் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 350 கிலோ பைப், பண்ம் ரூ. 60 ஆயிரம் மீட்கபட்டது.