தாயை அடித்து உதைத்த அரசு பெண் டாக்டர் மீது வழக்குபதிவு ..!

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோட்டை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 73 ) இவரது மகள் சங்கீதா (வயது 46) இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .இவருக்கும் இவரது தாய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டாக்டர் சங்கீதா வீட்டில் இருந்த வாளியை எடுத்து தனது தாயை சரமாரியாக தாக்கினார். இதில் ராஜம்மாள் படுகாயம் அடைந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் டாக்டர் சங்கீதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.