கந்துவட்டி கேட்டு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் – 3 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி உமா( வயது 37 )இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், திவ்யா ஆகாஷ், ஆகியோரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பல தவணைகளில் ரூ.13 லட்சத்து 52 ஆயிரம் வட்டிக்கு வாங்கி இருந்தார்.  இந்த பணத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 18 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து விட்டார். இந்த நிலையில் குமார் நேற்று ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது ரஞ்சித் திவ்யா, ஆகாஷ், ஆகியோர் உமாவை வழிமறித்து கந்து வட்டி கேட்டு இரும்பு பைப்பாலும், கறும்பாலும் தாக்கினார்களாம். இது குறித்து பீளமேடு போலீசில் உமா புகார் செய்தார். போலீசார் ரஞ்சித், திவ்யா, ஆகாஷ் ஆகியோர் மீது கந்துவட்டி தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.