கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக லட்ச கணக்கில் மோசடி- பெண்கள் உள்பட 5 தரகர்கள் மீது வழக்கு..!

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் அருகே தனியாருக்கு சொந்தமான கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் மாணவர்கள் விரும்பிய சீட் வாங்கி தருவதாக கூறி இடைத்தரகர்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.இது குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அதன் துணைப் பொது மேலாளர் ஆனந்த் (வயது 47) செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெங்கடாபுரம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சந்தோஷ், நாடார் வீதி சாகித்,விஷ்ணு தாஸ், சவுந்தர்யா , கே.கே.புதூர் கீர்த்திகா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..