குடிபோதையில் நாயை கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர வாலிபர் கைது..!

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையத்தைச் சேர்ந்தவர் பார்வதி, இவரது மகன் சிவக்குமார் .இவர் தெருவில் சுற்றித்திரிந்த ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து வந்தார் .இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 30) என்பவர் குடிபோதையில் அங்கு வந்தார். அவரை பார்த்தும் இந்த நாய் குரைத்தது .இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் அங்கு கடந்த கட்டையை எடுத்து சிவக்குமார் வளர்த்து வந்த நாயை அடித்துக் கொன்றார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்தனர்.