மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு-பைக் ஆசாமிக்கு வலை..!

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மனைவி செல்வராணி ( வயது 68 )இவர் அழகேசன் ரோட்டில் உள்ள ஒரு தோல் நோய் சிகிச்சை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நடந்துசென்று கொண்டிருந்தார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் இவரது கழுத்தில் கடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து செல்வராணி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் மீனா குமாரி வழக்கு பதிவு செய்துமர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்