கோவையில் கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணிடம் 3½ பவுன் தங்க செயின் பறிப்பு..!

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி கல்யாணி (வயது 56). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் தனது வீட்டிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த கல்யாணி இது குறித்து போத்தனூர் போலீசில புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.