14 வயது சிறுமியிடம் ஆபாச படங்களை அனுப்பி சில்மிஷம் – போக்சோவில் சித்தப்பா கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி.இவரது சித்தப்பா திருஞானம் (வயது 42)அதே பகுதியில் வசித்து வருகிறார்.இவர் அந்த சிறுமியுடன் செல்போனில் ஆபாச படங்களை காட்டி பல தடவை சில்மிஷம் செய்துள்ளாராம். பள்ளிக்கூடத்தில் இந்த மாணவிக்கு இது பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் இது பற்றி தெரிந்து கொண்டார்..இந்த நிலையில் அவரது சித்தப்பா வீட்டுக்கு வார விடுமுறைக்கு சென்றிருந்தார்.அங்கு வைத்து அந்த சிறுமியை திருஞானம் சில்மிஷம் செய்தாராம்..இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்னம் விசாரணை நடத்தி மாணவியின் சித்தப்பா திருஞானத்தை நேற்று மாலை கைது செய்தார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.