15 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து பலாத்காரம்- போக்சோவில் கைதான கணவர்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் 15 வயது
சிறுமி. கடந்த மாதம் 14-ந் தேதி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி
(வயது 22) என்பவருக்கும் சிறுமியின் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம்
செய்து வைத்தனர். இதனை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து ஆனைமலை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சிறுமியின் ஊருக்கு சென்று அவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜோதிமணி சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து அதிகாரிகள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார்
செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
செய்து 15 வயது சிறுமியை திருமணம் செய்த ஜோதிமணியை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் நடத்தினர். தலைமறைவாக
உள்ள சிறுமியின் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.