திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய பட்டதாரி வாலிபர் தலைமறைவு-போலீஸ் வலை.!

கோவை அருகே உள்ள மலுமச்சம்பட்டியை சேர்ந்த 20 வயது மாணவி.
பி.காம். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு
படித்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் போது தோழி ஒருவர் மூலமாக
போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான கோகுல் (வயது 23)
என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி
வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 வருடங்களாக
ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவி வீட்டில் தனியாக
இருந்தார். அப்போது அங்கு சென்ற கோகுல் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் கடந்த
மார்ச் மாதம் முதல் கோகுல் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று
பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து அவர் தனது காதலனிடம்
தெரிவித்தார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்யும்படி கூறினார்.
ஆனால் கோகுல் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில்
விரக்தி அடைந்த தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது
மாணவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் கோவை அரசு
ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த
தகவலின் அடிப்படையில் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலயில் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கோகுல் மீது
வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.