மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அனிதா

ஸ்ரீரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ வி.ஜி.சரவணன் தன்னை ராஜினாமா செய்யக்கோரி ₹50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆடியோ ஆதாரங்களுடன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது போலீஸார் புதிய புகார் பதிவு செய்து விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்.எல்.ஏ சரவணனிடம் உள்ள ஆடியோ ஆதாரங்களை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் தனக்கு நேரடியாக மிரட்டல் விடுத்ததாக சரவணன் குறிப்பிட்டுள்ளதால், இது தொடர்பாக தனியாகப் புகார் பதிவு செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. தான் அடிமட்டத்திலிருந்து மக்கள் பணியால் உயர்ந்தவன் என்பதால் தன்னை குறிவைப்பதாகவும், எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குதிரை பேரக் குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.