எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு செல்வது என்றால் பாஸ்போர்ட் தேவைப்படுகிறது.பாஸ்போர்ட் இல்லாமல் விமானம் மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ எந்த வெளிநாடுகளுக்கும் யாராலும் செல்ல முடியாது.
பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அவசரமாக பாஸ்போர்ட் தேவையென்றால் தட்கல் மூலமாக கூட பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க முடியும். அதற்கு கொஞ்சம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில்தான் 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணத்தை ரூ.1500 லிருந்து 2500 ஆகவும், தக்கல் முறை பாஸ்போர்ட்டுக்கு ரூ.5000 ஆகவும் உயர்த்தி வெளியறவு அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
அதேபோல், 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3500 ஆகவும், தக்கல் முறைக்கு ரூ. 6 ஆயிரம் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது.









