தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அன்னூரில் இளைஞர் திறன் திருவிழா

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அன்னூரில் இளைஞர் திறன் திருவிழா.

தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் அன்னூர் வட்டாரத்தில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கோவை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் அன்னூர் வட்டாரத்தில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளதாகவும், இதில் DDU GKY, RSETI, TNSDC திட்டத்தில் நடைபெறும் எனவும், இந்த இலவச திறன் பயிற்சியில் 18 முதல் 45-வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் (ஆண், பெண், இருபாலர்) தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞர் திறன் திருவிழா அன்னூர் பகுதியில் அமைந்துள்ள K.G.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 30 – ஆம் தேதி காலை 9 – மணி முதல் மாலை 4 – மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DDU GKY திட்டத்தின் கீழ் warehouse supervisor, retail sales associate, Android mobile phone operator, assistant catering manager general duty assistant, sewing machine operator knits, business correspondent and business facilitator ஆகிய பயிற்சிகளும் RSETI திட்டத்தின் கீழ் beauty parlour management, women’s tailor, candle making, pickle and masala powder, costume jewellery, Beekeeping ஆகிய பயிற்சிகள் மற்றும் TNSDC திட்டத்தின் கீழ் IT- It’s, Apparel, Automotive, Textile and Handlooms, Healthcare போன்ற sector கீழ் பயிற்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர் திறன் திருவிழாவில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கல்வி சான்றிதழ் ஆதார் அட்டை சுய விவர புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றிதழ்களுடன் (அசல் மற்றும் நகல்) கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.