பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் பையில் இருந்த பணத்தை நைசாக திருடிய இளம்பெண் கைது..!

கோவை ஒண்டிப்புதூர், கம்போடியா மில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 40) இவர் நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் இவரது பையில் இருந்த 600 ரூபாயை நைசாக திருடினார். இதை பார்த்த சரஸ்வதி சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை மடக்கி பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர் . விசாரணையில் அந்தப் பெண் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த குமார் மகள் பவித்ரா ( வயது 19 )என்பது தெரிய வந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்..