லஞ்ச வழக்கு… கைதான பெண் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜாமீன் மனு தள்ளுபடி.!!

கோவை சூலூரில் உள்ள ஒரு கோவில் விவகாரத்தில் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்கிய போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.அவர் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.